நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி, பாலூரைச் சார்ந்த, செந்தமிழர் பாசறை வளைகுடா துணைத் தலைவர் அன்புத்தம்பி சுல்தான் அவர்களின் தந்தையாரும், பகரைன் செந்தமிழர் பாசறையின் துணைத்தலைவர் ஆயிசா சுல்தான் அவர்களின் மாமனாருமான ஐயா சையத் ஹஃபிஸ் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச்செய்திறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தம்பிசுல்தான் மற்றும் சகோதரி ஆயிசா சுல்தான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சையத் ஹஃபிஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


