நாம் தமிழர் கட்சி – கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை – பாபநாசம் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி உ.இளையராஜா அவர்களின் தந்தையும், தகவல் தொழில்நுட்பப் பாசறை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயலாளர் சண்.மணிமாறன் அவர்களின் தாத்தாவும்
மதிப்பிற்குரிய ஐயா சிவ.உலகநாதன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி உ.இளையராஜா அவர்களுக்கும், சண்.மணிமாறன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சிவ.உலகநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



