மதுரை மாவட்டம், திருப்பாறை கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை – வளைகுடா மூத்த பொறுப்பாளர் அன்புத்தம்பி சிக்கந்தர் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா க.காதர்சா அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி சிக்கந்தர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா க.காதர்சா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



