நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கந்திலி மேற்கு ஒன்றியம் பரதேசிப்பட்டி ஊராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி இரா. இராஜீவ் காந்தி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இராஜா குட்டி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி இராஜீவ் காந்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராஜா குட்டி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



