இத்தனைக்கும் பிறகும் சீனாவுடன் தொடர்ந்து நட்பு கொண்டாடி, இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு வரும் இலங்கையை, தொடர்ந்து இந்திய அரசு ஆதரிப்பது வெட்கக்கேடானது. எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இலங்கை உருமாறும் என்பதை இந்திய ஒன்றிய அரசு தற்போதாவது உணர்ந்து, இலங்கையுடனான தமது வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றாவிடில் மிகப்பெரிய விலையை இந்திய பெருநாடு தர நேரிடுமெனவும் எச்சரிக்கிறேன்.
ஆகவே, இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஈழத்தமிழ் மக்களே என்றென்றும் உறுதுணையானவர்கள் என்ற பேருண்மையை இந்திய ஒன்றிய அரசு இனியாவது உணர்ந்து, ஐக்கிய அமெரிக்கப் பேரவையில் கொண்டு வந்ததுபோல், ஐ.நா.மன்றத்தில் ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து உலக நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்ற உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஈழ விடுதலைக்குத் துணைநிற்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)


