மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிப் பொருளார் அன்புத் தம்பி முருகன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தம்பி முருகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி முருகன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!



