திருவண்ணாமலை மாவட்டம், நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கீழ்ப்பென்னாத்தூர் தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி கோ.பிரபு அவர்களின் அண்ணன், அன்பு சகோதரர் கி.சின்னதுரை அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
பாசமிகு அண்ணனை இழந்து வாடும் தம்பி பிரபு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்பு சகோதரர் சின்னதுரை அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


