வெற்றியையும், தோல்வியையும் நீங்கள்தான் உருவாக்கிக்கொள்கிறீர்கள். உங்களுடைய விதியைத் தீர்மானிப்பது நீங்களே!
தலைவன் என்றாலே மக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டுமே தவிர, தனித்து இருக்கக் கூடாது.
ஒரு முயற்சி நிறுத்தப்படும்பொழுது தோல்வியாகிறது; தொடரப்படும்பொழுது வெற்றியாகிறது.
எதை மனம் கற்பனை செய்கிறதோ, எதை மனம் நம்புகிறதோ, அதை அடைகிறது; அதுவாகவே மாறுகிறது.
விரிக்காதவரை சிறகுகள் கூட பாரம்தான்; விரித்துவிட்டால் வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்.
கடின உழைப்பும், விடா முயற்சியுமே வெற்றியின் ரகசியம்!
– முனைவர் மு.க.அன்வர் பாஷா


