ஒவ்வொரு நாளும், இதுவே நம்முடைய வாழ்வின் கடைசி நாள் என்ற உணர்வுடன் இயன்றவரை நல்லதைச் செய்யுங்கள்!
பலமுறை சோதனைகளில் தோல்வியடைந்த எடிசன், சுவற்றில் எழுதி வைத்த வாசகம் இதுதான்; ‘மீண்டும் முயற்சி செய்’
எவ்வளவு பணம் கொடுத்தும் ஒரு நாயை வாங்கிவிட முடியும். ஆனால் ‘அன்பு’ மட்டுமே அதன் வாலை ஆட்ட உதவும்.
வாழ்வில் கற்றுக்கொடுப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை. தொடர்ந்து கற்றுக் கொள்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்.
பிரச்சனையே இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று இறைவனிடம் கேட்காதீர்கள். பிரச்சனைகளைச் சமாளிக்க ஆற்றலைக் கேளுங்கள்.
விழிப்பதற்கே உறக்கம்; வெல்வதற்கே தோல்வி; எழுவதற்கே வீழ்ச்சி; மறந்து விடாதீர்கள்.
மூச்சுவிடுபவன் எல்லாம் மனிதன் அல்ல; முயற்சி செய்பவனே மனிதன்!


