இனமானத்தமிழர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றி! – சீமான் கருத்து

251

இனமானத்தமிழர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றி! – சீமான் கருத்து

தஞ்சை மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கிற திட்டமானது ஒன்றிய அரசால் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது! தமிழர்களின் எதிர்ப்புணர்வுக்கு அடிபணிந்து திட்டத்தைச் செயல்படுத்துவதிலிருந்து பின்வாங்கியிருக்கும் பாஜக அரசின் கொள்கைமுடிவு காவிரிப்படுகை வேளாண்பெருங்குடி மக்களால் கொண்டாடத்தக்கது! இது தமிழர் நிலத்தின் மீது தொடுக்கப்படும் நிலவியல் போருக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த இனமானத்தமிழர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றி!

மண்ணையும், மக்களையும் பாதிக்கக்கூடிய எதுவென்றாலும், தமிழர் நிலமும், இனமும் தன்னெழுச்சியாகப் போராடுமென்பதை இனியாவது ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்! ஏனென்றால், இது தமிழ்நாடு!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநீலகிரி தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும். – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பிறந்த நாள்