நத்தம் தொகுதியின் முன்னாள் தொகுதிச்செயலாளர் அருமைத்தம்பி அலெக்ஸ் பாண்டியன் அவர்களின் துணைவியார் யோகநாயகி அவர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். (1/2)
https://bit.ly/3Gg8Fs1

வாழ்க்கைத் துணைவியை இழந்து, ஆற்ற முடியாப் பேரிழப்புக்கு ஆட்பட்டு, கைக்குழந்தையோடு நிற்கும் தம்பி அலெக்ஸ் பாண்டியனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(2/2)


