01/09/2021 அன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் ஆத்தூர் நாம் தமிழர் கொடிமரம் (காமராசர் சிலை)அருகே வீரமிகு பாட்டனார் பூலித்தேவன், தமிழ் தேசிய போராளி தமிழரசன் மற்றும் கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா ஆகியோரின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஆத்தூர் நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டு ஈகியர்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
நன்றி!
செய்தி வெளியீடு
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522