தேனி (கி) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளரும், ஆகச்சிறந்த களப்போராளியுமான அன்பு இளவல் இலட்சுமணன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.



