நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர் என்னுயிர்த்தம்பி புதுக்கோட்டை ஜெயசீலன் என்கிற வெற்றிச்சீலன் அவர்களது தாயார் அம்மா ரஞ்சிதம் அவர்கள் கொடுமையான கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.

அம்மாவை இழந்து வாடும் ஆருயிர் இளவல் ஜெயசீலனுக்கும், அவரது உற்றார் உறவினர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கேற்கிறேன்.
அம்மா ரஞ்சிதம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)

