ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த, மன்னார் மறை மாவட்ட முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
பேராயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்.

பேராயர் இராயப்பு ஜோசப் அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும், தமிழ்த்தேசியத்தின் மீது நீங்காத பற்றுறுதியுடன் இனத்தை முதன்மைப்படுத்தி மக்களுக்கு அவராற்றிய மகத்தான பணிகளை தமிழினம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூறும்.

