மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்ட நிகழ்வானது பேராவூரணி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் துருவன் செல்வமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினர். இதில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் திரளாக பங்கேற்றனர்.