கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் 17. 01. 2021 அன்று பொங்கல் மற்றும் அய்யன் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான மகளிர், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மழலையர்கள் கலந்துகொண்டு கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.