புதுவை மாநில காலாப்பட்டு தொகுதியில் தமிழர்களின் வீரகலை கடந்த ஞாயிற்றுக்கிழமை (14/06/2020) சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா சிந்தனை சிற்பிசிங்காரவேலர் குடிலான நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி அலுவலகத்தில்
நடைபெற்றது இந்நிகழ்ச்சியினை காலப்பட்டுதொகுதி செயலாளர் காமராஜ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
புதுச்சேரி நாம்தமிழர்கட்சி
மாநிலசெயலாளர் முத்.அம்.சிவகுமார் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
காலாப்பட்டு தொகுதியில் உறவுகள் வினோத் லோகேஷ் வெங்கடேஷ் இராஜ்குமார் இராஜசேகர் வினோத் இராஜ்கிரண் சீதாராமன் இளங்கோ இராகுல் யுவன்ராஜ் அழகுமாரி கேணி கமலேஷ் தனுஷ் மணி சதிஷ் நரேன் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தொழிற்சங்க பாசறை செயலாளர் ரமேஷ், மகளிர் பாசறை செயலாளர் கௌரி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் நிசார்அகமது முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் தமிழன்மீரான் முதலியார்பேட்டை தொகுதி செயலாளர் செந்தமிழன், இந்திராநகர் தொகுதி செயலாளர் திருக்குமரன் வில்லியனூர் தொகுதி பொறுப்பாளர் பிரவீனா, ஊசுடு தொகுதி செயலாளர் மோகன்ராஜ் அனைவரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
நாம்தமிழர்கட்சி உறவுகளுக்கு தமிழர்களின் வீரகலையின் பயிற்சியினை முத்தியால்பேட்டை தொகுதி உறவு தம்பி செல்வமதன் அவர்கள் வழங்கினார்.