அறிவிப்பு: வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம் – ஓமலூர் (சேலம்)
நமது வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களின் 214ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நாளை 07-08-2019 புதன்கிழமை மாலை 5 மணியளவில் சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருக்கிறது.
இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வீரவணக்கவுரையாற்றுவார்.
அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று நமது பாட்டனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி