அறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை

61

அறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை | நாம் தமிழர் கட்சி

உலகில் எந்த நாட்டிலும் பாதுகாக்க முடியாத அணுக்கழிவுகளை வெளியேற்றும் அணுஉலைகளை மூடிட வலியுறுத்தியும், அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுஉலைக்கு அருகில் புதைக்கும் திட்டத்தைக் கண்டித்து இன்று 14-06-2019 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் கலையரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை இன்று காலை 10 மணியளவில் தடை விதித்தது. மேலும் இராதாபுரம் பகுதிக்குள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நுழையவும் காவல்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இராதாபுரத்தில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் பாளையங்கோட்டை, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் பாசறைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா? நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை