தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் நடைபெற்றது.
கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பால்பாண்டி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்தலைவர் செந்தூரபாண்டி உள்ளிட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.