மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (08-12-15) பார்வையிட்டு, அவர்களுக்கு அரிசி, ரொட்டி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக சென்று நேரில் வழங்கினார்.
நாளை(09-12-15) திருவொற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளார்.