நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் 28-06-15 அன்று புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். மேலும், இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் கார்வண்ணன், கொள்கைபரப்புச்செயலாளர் பேராவூரணி திலீபன், கல்வியாளர் இமாயூன், ஆட்சிமொழிப்பாசறைச் செயலாளர் புலவர் மறத்தமிழ்வேந்தன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் தமிழினியன், மாநில மாணவர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் அருண்குமார், திருப்பூர் சுடலை ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.
முன்னதாக, அன்னவாசல் கிராமத்தில் புலிக்கொடியினை செந்தமிழன் சீமான் ஏற்றிவைத்தார்.