பெங்களூரில் மாபெரும் போராட்டம்- இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது
சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது என்றும்., இந்தியா அதை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு, கருநாடகம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. 2000 திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எழுச்சியுற கலந்து கொண்டனர். போராட்டம் பெங்களூரு டவுனால் முன்பு 20/10/2013 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.