வடுகம்பட்டி அழகிரிசாமி, சாமி பழனியப்பன் மறைவு தமிழ்த் தேசிய இனத்திற்கு பேரிழப்பாகும்: தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு அளித்தவரும், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களுடன் தோளோடு தோள் நின்று தமிழினத்தின் உரிமை போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவருமான வடுகம்பட்டி அழகிரிசாமி மறைவு தமிழ்த் தேசிய இனத்திற்கு பேரிழப்பாகும்.
தந்தை பெரியாரின் கொள்கை வழி நின்று, தமிழ் மொழிக்காகவும், தமிழினத்தின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களில், குறிப்பாக இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற தீரர் சாமி பழனியப்பன் அவர்கள். நம் இனம் காக்க வேண்டுமெனில் நம் மொழி காக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர் ஐயா சாமி பழனியப்பன் அவர்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரோடு மொழிப்போர் களம் கண்ட தீரர்களுக்கும், அவருடைய மகன் கவிஞர் பழனிபாரதிக்கும் நாம் தமிழர் கட்சி தனது இரங்கலையும், அவரது தமிழ்த் தொண்டுக்கு புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறது.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்