நாம் தமிழராய் புரட்சி செய்வோம்!!

23

காக்கைக்கு உணவிட்டு உணவுண்ட நம்மினம்
இன்று ஒருவேளை சோற்றுப் பருக்கைக்கு
வழியில்லாமல் கிடக்கிறதடா..! பசிக்கு உணவிட்டு
உணவுண்ட நம்மினம் இன்று மண்ணின்
கோரப்பசிக்கு உணவாகிப்போகிறதடா.!
பாலுக்கு அழுகிறதடா குழந்தை..! தாய்க்கே
பால் ஊற்றுகிறதடா இலங்கை..!! கற்புக்கு
இலக்கணமாய் கண்ணகியை குறிபபிட்டாயடா
தமிழா.! இன்று கண்ணிமைக்கும் நேரத்தில்
கற்பழிக்கப்படுகிறார்களடா நம் ஈழக் கண்மணிகள்.!!
புத்தகம் சுமக்க வேண்டிய வயதினிலே
சிங்களவனின் கருவை சுமக்கிறார்களடா.!!
ஆடைகாட்டி வாழ்ந்த நம்மினம் -இன்று
அம்மணமாய் நிற்கிறதடா-அரைவயிறு
கஞ்சியும் இல்லாமல் நித்தம் நித்தம் துடிக்கிறதடா.!!
கூடிவாழ்ந்த நம்மினம் இன்று கூண்டோடு
அழிந்துபோகிறதடா.!! ஆளப் பிறந்த
நம்மினம் இன்று அடிமையாய் கிடக்கிறதடா..!!
தமிழா..! உன்இனம் மொத்தமும் ஈழத்திலே
கொன்று புதைக்கப்பட்டதடா.!! இத்தனை
துயரும் ‘தமிழர்’ என்பதனாலடா -தாயகத்தமிழா.!!
அது உன்மீது விழுந்த அடி தானடா..!
‘ஈழம்’- உன் சொந்தநாடு தானடா..!
ஈழமென்றால் ஏனடா வேற்றுக்கிரகவாசிகளாய் பார்க்கிறாய்.!
உனக்கும் சேர்த்துதானடா தலைவர் நாடு
கேட்டார்.! தமிழகமும்-தமிழீழமும் இடம்தானடா
வேறு.! நம்மினம் ஒன்றுதானடா.!!!
ஆறரைகோடி பேர் இருந்தும் -அங்கு
அனாதையாக செத்தார்களடா நம்உறவுகள்.!
அழுதபோதும் துடித்தலறியபோதும் கூக்குரலிட்டது
நம்மைத்தானடா.! கைவிட்டது நாம்தானடா..!!
தமிழா..! இன்னும் ‘கை’யை நம்பியிருக்க போகிறோமா..???
வெறும் கையை மட்டும் பிசைந்து நிற்க போகிறோமா..???
அழுதது போதும்.! அடிபட்டது போதும்.! நம் உரிமைகளை
பறிகொடுத்தது போதும்.! நம் உறவுகளை
பலிகொடுத்தது போதும்..! தமிழா..!
வெகுண்டெழுந்து வா.! தலைவரின் மொழியே
நம்மை வழிநடத்தட்டும்.! மாவீர்களின் ஆவியே
நமக்கு வழிகாட்டட்டும்.!! எழுந்து வா.!
தமிழராய்..! சாதி மறந்து மதம் துறந்து..!!
ஒன்றுகூடு நாம் தமிழராய்..!!
இனியொரு விதி செய்வோம்.!
நாம் தமிழராய் புரட்சி செய்வோம்..!!

எழுச்சியோடு,
நாம் தமிழர் கட்சி,
முத்துப்பேட்டை ஒன்றியம்,
திருவாரூர் (மாவட்டம்)
+91 9865550270

முந்தைய செய்திஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொல்லப்பட்டது கொடூரமானது: நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்
அடுத்த செய்தி“Open Letter to Arunthathi Roy” – Naam Tamilar America & Canada