கடந்த சூன் 26, 2011 சித்திரவதைக்கு எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.
இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்த, அவர்களுக்காக நீதி கேட்க நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கு கொண்டு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வு நாம் தமிழர் கட்சியினர் உட்டப்பட தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்ப்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்வில் இன உணர்வாளர்களும், பொதுமக்களும் எழுச்சியுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்வு உணர்ச்சிகரமாக அமைந்தது.