இறுதி நேர யுத்தத்தின்போது யுத்தப் பிரதேசத்தில் இருந்த ஒரு லட்சம் பொதுமக்களுக்குக் கணக்கு காட்டப்படவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐநா சபையால் வெளியிடப்படவுள்ள இந்த வேளையில், வெளியுலகத் தொடர்பின்றி மறைக்கப்பட்டுள்ள இலங்கையின் வடபகுதியில் பொதுமக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை, அடக்கி வைக்கப்பட்டுள்ள முகாம்கள், அந்த மக்கள் சந்திக்கும் பல்வேறு கொடுமைகளை வெளிப்படுத்துகின்ற ஆதாரங்கள் சி4 வுக்குக்கிடைத்துள்ளது.