தமிழீழ தேசிய தலைவரின் தாயார் அன்னை பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி இராசபளையத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

170

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தாயார்அன்னை பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி விருதுநகர்மாவட்டம்,   இராசபளையத்தில் (21 – 02 -2011) அன்று மாலை 5 .00மணியளவில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழின உணர்வாளர்கள்மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.இப்பேரணியில் 300 – க்கும் மேற்ப்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்பேரணி இராசபாளையம் பெரியார் சிலையிலிருந்து கிளம்பி நகர் வலம்வந்து அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் முடிவுற்றது.முடிவில் அன்னைக்கு மலரஞ்சலியும், வீரவணக்கமும் செலுத்தப்பட்டுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் அறிவரசன் அய்யாசிறப்புரை ஆற்றினார்கள்.

முந்தைய செய்திதமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாள் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சி நடத்திய வீரவணக்க நிகழ்வு.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழின போராளி சுபா.முத்துக்குமார் படுகொலையை கண்டித்து தஞ்சை நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.