கேணல் கிட்டு

53

கேணல் கிட்டு …

வல்வை மண் தந்த – வீரத்
தமிழ்ப் பொட்டு!
வெல்வோம் நாம் என்று
நல்ல தமிழ் மண் மீட்கத்
துள்ளியெழுந்த தூய புலிவீரன் –
அவன் கிட்டு!
இல்லை என்ற சொல் துறந்து
கால் இல்லை என்று ஆன பின்னும்
தன் பணியை மண் பணியாய்
தன் நெஞ்சில் சுமந்தான் –
தன் நலம் விட்டு!

தலைவனுக்கு ஒரு கையாய்
தமிழ் மண்ணிற்கோ தளபதியாய்
நிலை இழந்த மக்களிற்கு நீதிபதியாய்
கலையுள்ளம் கொண்ட காளை – இவன்
வாழ்ந்த காலமதோ மிக மட்டு!

தாய் மண்ணைத் துறந்தது மட்டுமல்ல
தன் பெண்ணையும் துறந்திங்கு
அந்நிய மண்ணில் அவனிருந்தாலும்
எண்ணியதெல்லாம் ஈழமண் விடிவுதான்!
மண்ணைப் பொன்னாக்க
அவன் செய்த புண்ணியங்கள்
ஆயிரம் ஆயிரம்!

இதயம் பிழியும் இடர்கள் நேர்ந்து –
பன்னிரண்டு ஆண்டுகள்!
நெஞ்சம் மகிழ……..தன் மண் நோக்கிப்
புறப்பட்ட மாவீரன்!
என்ன நினைத்திருப்பான்?

வங்கக் கடலலையும்
வழியனுப்பி வாழ்த்திசைக்க –
இந்தியமோ –
இன்னோர் இழிசெயலை
இருளில் திணித்து விட
நம் வீரர் தமக்காக வாழ்பவரல்லவே!
திண் வீரர் – மண் காக்க –
விண்ணை உடைத்தொருகால்
வீர இடிமுழங்க –

தண்ணென்ற நீரலையில்
தம்மைக் கரைத்தனரே!
விண் வீரன் – கிட்டு
நீ எங்கள் காவிய நாயகன்.

— சந்திரா இரவீந்திரன்
இலண்டன்

நன்றி

( http://manaosai.blogspot.com/2008/01/blog-post.html)

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்திய பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி செயல் வீரர்கள் கூட்டம்.