ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு.

67

மாவீரர் நாள் நவம்பர் 27, 2010 அன்று நாம் தமிழர் கட்சி உளிட்ட,தேசிய உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பாக காசுமீர் கசுமீரிகளுக்கே என்ற தலைப்பில் கருத்தரங்கமும் மாவீரர் வீரவணக்க நிகழ்வும் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெட்ட்றது. 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.



காசுமீர் விடுதலை இயக்கம் சார்பாக வந்து இருந்த தோழர் ஆசாத் அவர்கள், ஈழம் போன்று கசுமீரில் இந்திய ராணுவம் செய்யும் அட்டூழியங்களை கண்ணீர் மல்க கூறினார். நமது தமிழ் தேச விடுதலைக்கும், ஈழ விடுதலைக்கும், காசுமீர் மக்கள் அதரவு கொடுப்பார்கள் என்று உறுதி கூறினார். நிகழ்வில் வழக்குறைஞர் ப.மோகன் அவர்கள் பேரறிவாளனின், மன உறிதியுடன் கூடிய ஆற்றலையும், நிகரில்லா தியாகத்தையும்,அவருக்கு இழைக்கப்பட்ட அநிதியையும் கூறி பேரறிவாளனின் முறையீட்டு மடல் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். 


நிகழ்ச்சி இறுதியில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் நாம் தமிழர் தோழர்கள் குடும்பத்துடன் மாவீரர் நினைவு தூண் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு தலைமையில் வீரவணக்கம் செலுத்தி நாம் தமிழர் உறுதி மொழி ஏற்றனர்.



முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் வழக்கு வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றம்
அடுத்த செய்திராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கட்சியினர் நூற்றுகணக்கானோர் பங்கேற்ப்பு