நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கானப் பாசறையின் தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு நேற்று 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை, வளசரவாக்கத்திலுள்ள, சுபிக்சா கூட்ட அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவுக்கான இலச்சினை மற்றும் இதழை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார்.