அறிவிப்பு: டிச.26, சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரியும் கொள்ளிடம் ஆற்று மணற்கொள்ளையைக் கண்டித்தும் மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

242

க.எண்: 2022120592
நாள்: 24.12.2022

அறிவிப்பு:
மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
(டிச.26, சீர்காழி)

வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு துயர் துடைப்புத் தொகை உடனே வழங்கக்கோரியும், போலி ஒப்புதல் சீட்டைக் கொண்டு கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடப்படுவதைக் கண்டித்தும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும் சீர்காழி, பழைய பாளையத்தில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக மூடக்கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 26-12-2022 திங்கள்கிழமையன்று மாலை 03 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு
தமிழக அரசு உடனே துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரி

மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
26-12-2022 திங்கள்கிழமை, மாலை 03 மணியளவில்

கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
சீர்காழி
பழைய பேருந்து நிலையம் அருகில்

இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: டிச.26 புதுச்சேரியில் விருட்சம் மருத்துவமனை திறப்பு விழா மற்றும் மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா
அடுத்த செய்திஅறிவிப்பு: டிச. 28, டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்தும், மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலைவாய்ப்பு உரிமைக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்