அறிவிப்பு: டிச. 28, டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்தும், மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலைவாய்ப்பு உரிமைக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

317

க.எண்: 2022120596
நாள்: 25.12.2022

அறிவிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டாடா தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள 3800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20000க்கும் மேற்பட்ட வேளாண்பெருங்குடிகளை வெளியேற்ற துடிக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்தும், டாடா தொழிற்சாலையில் பெருமளவில் வடமாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படுவதைக் கண்டித்தும், 90 விழுக்காடு வேலைவாய்ப்பு உரிமையை மண்ணின் மைந்தர்களுக்குப் பெற்றுத்தர தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்தும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 28-12-2022 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில், வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளியில் இராயக்கோட்டை – ஒசூர் நெடுஞ்சாலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்தும்,
மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலைவாய்ப்பு உரிமைக் கோரியும்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
28-12-2022 புதன்கிழமை, காலை 10 மணியளவில்

கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
உத்தனப்பள்ளி
இராயக்கோட்டை – ஒசூர் நெடுஞ்சாலை
வேப்பனப்பள்ளி தொகுதி, கிருஷ்ணகிரி மாவட்டம்

இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: டிச.26, சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரியும் கொள்ளிடம் ஆற்று மணற்கொள்ளையைக் கண்டித்தும் மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் சந்திப்பு (திருப்பூந்துருத்தி) மற்றும் ‘தக்கார்’ ம.சோ.விக்டர் நூல் வெளியீட்டு விழா (அரியலூர்)