க.எண்: 2022120592
நாள்: 24.12.2022
அறிவிப்பு:
மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
(டிச.26, சீர்காழி)
வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு துயர் துடைப்புத் தொகை உடனே வழங்கக்கோரியும், போலி ஒப்புதல் சீட்டைக் கொண்டு கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடப்படுவதைக் கண்டித்தும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும் சீர்காழி, பழைய பாளையத்தில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக மூடக்கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 26-12-2022 திங்கள்கிழமையன்று மாலை 03 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு
தமிழக அரசு உடனே துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரி
மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
26-12-2022 திங்கள்கிழமை, மாலை 03 மணியளவில்கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
சீர்காழி
பழைய பேருந்து நிலையம் அருகில்
இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி