தலைமை அறிவிப்பு – நவம்பர் 01 தமிழ்நாடு நாள் மாபெரும் பொதுக்கூட்டம் எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

109

க.எண்: 2025100911

நாள்: 09.10.2025

அறிவிப்பு:

நவம்பர் 01

தமிழ்நாடு நாள்
மாபெரும் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: ஐப்பசி 15 | 01-11-2025 மாலை 04 மணியளவில்

இடம்:
தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்
சென்னை அம்பத்தூர்

 

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். இவ்வாண்டு, வருகின்ற ஐப்பசி 15ஆம் நாள் 01-11-2025 அன்று மாலை 05 மணியளவில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கின்றது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தெய்வத்திருமகன் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் திருப்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்