தலைமை அறிவிப்பு – மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்! நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் ‘மரங்களின் மாநாடு’

42

க.எண்: 2025080745

நாள்: 27.08.2025

அறிவிப்பு:

மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!
நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை நடத்தும்‘மரங்களின் மாநாடு’
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
ஆவணி 14 | 30-08-2025
காலை 10 மணிமுதல்

இடம்:
வெற்றி தோட்டம்
அருங்குளம் (திருத்தணி அருகில்)
திருவள்ளூர் மாவட்டம்

 

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆவணி 14ஆம் நாள் 30-08-2025 காலை 10 மணிமுதல் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், அருங்குளம் வெற்றி தோட்டத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் “மரங்களின் மாநாடு” நடைபெறவிருக்கின்றது.

இம்மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மரங்களின் மாநாடு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் விடுதி