க.எண்: 2025070647
நாள்: 03.07.2025
அறிவிப்பு:
தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி தாத்தா கலியபெருமாள்
சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து புகழ்போற்றும் இடம்: |
தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி புலவர் தாத்தா கலியபெருமாள் மற்றும் சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து ஆகியோரின் புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக (ஆனி) 20 ஆம் நாள் (04.07.2025) மாலை 04 மணியளவில் காட்டுமன்னார்கோயிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பேரெழுச்சியோடு நடைபெறவுள்ளது.
இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி