க.எண்: 2022020082
நாள்: 04.02.2022
அறிவிப்பு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம்
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு;
நாள் மற்றும் நேரம் |
பங்கேற்க வேண்டிய மாவட்டங்கள் | வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறும் இடம் |
06.02.2022 மாலை 5 மணிக்கு |
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதநகர் | எஸ்.எஸ்.திருமண மண்டபம் ஒத்தக்கடை – மேலூர் சாலை மதுரை யானைமலை |
07.02.2022 மாலை 3 மணிக்கு |
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை | ராயல் மகால்
அம்பேத்கர் சிலை அருகில் சிவகங்கை |
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி