க.எண்: 2025100910
நாள்: 09.10.2025
அறிவிப்பு:
தெய்வத்திருமகன்
தாத்தா முத்துராமலிங்கத் தேவர் நாள்: ஐப்பசி 08 | 25-10-2025 மாலை 04 மணியளவில் இடம்: எம்.ஜி.ஆர். நகர்
|
நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற ஐப்பசி 08ஆம் நாள் 25-10-2025
மாலை 04 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தெய்வத்திருமகனார் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின்
திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி