தலைமை அறிவிப்பு – பன்னாட்டு தமிழ் கிருத்துவப் பேராயம் மற்றும் சமூகநீதிப் பேரவை நடத்தும் உரையாடல் அமர்வு சீமான் கருத்துரை

7

க.எண்: 2025100903

நாள்: 06.10.2025

அறிவிப்பு:

பன்னாட்டு தமிழ் கிருத்துவப் பேராயம் மற்றும்
சமூகநீதிப் பேரவை நடத்தும்உரையாடல் அமர்வு
கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: புரட்டாசி 25 | 11-10-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை

இடம்: மர்கபா அரங்கம்
(லஸ்மன் சுருதி சந்திப்பு அருகில்)
சென்னை அசோக்நகர்

 

பன்னாட்டு தமிழ் கிருத்துவப் பேராயம் மற்றும் சமூகநீதிப் பேரவை சார்பாக புரட்டாசி 25ஆம் நாள் 11-10-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை சென்னை அசோக்நகரில் உள்ள மர்கபா அரங்கில் (லஸ்மன் சுருதி அருகில்),
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் “உரையாடல் அமர்வு” நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் கருத்தரங்கத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சிறுபான்மையினர் மக்கள் நலக் கட்சி நடத்தும் உரையாடி உறவை வளர்ப்போம்! சீமான் கருத்துரை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி கிள்ளியூர் மண்டலம் (கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்