முகப்பு தலைமைச் செய்திகள்

“பெரும்பாவலர்” பாரதியார் அவர்களின் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

211

பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள அவர் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 11-09-2024 அன்று மாலை அணிவித்து மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் சீமான் கையோப்பமிட்டு பள்ளி தலைமை ஆசிரியரிடம் சிறிது நேரம் பாரதி பணியாற்றிய இந்த சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் நினைவுகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – புதுச்சேரி மாநிலத் தொழிற்சங்கப் பேரவைச்…
அடுத்த செய்திஅளப்பெரும் நடிப்பாற்றலாலும், ஒப்பற்ற உடல்மொழியாலும், தனித்துவமிக்க மொழிநடையாலும் தமிழ் மக்களின்…