தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கலந்தாய்வுக் கூட்டம்

37

க.எண்: 2026010006
நாள்: 05.01.2026

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 06-01-2026 மாலை 05 மணியளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் அமைந்துள்ள ராயல் எம்பசி உண்டுறை விடுதி அரங்கில் (Hotel Royal Embassy) அரங்கில் நடைபெறவிருக்கிறது.
ஒருங்கிணைந்த ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த
கலந்தாய்வுக் கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: மார்கழி 22 | 06-01-2026 மாலை 05 மணியளவில்
இடம்:
ராயல் எம்பசி உண்டுறை விடுதி (Hotel Royal Embassy)
ஈரோடு பெருந்துறை சாலை
இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சேலம் வடக்கு மண்டலம் – பொறுப்பாளர்கள் மாற்றம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா 2026