தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு

14

க.எண்: 2025121021                                                                                                     நாள்: 15.12.2025

அறிவிப்பு:

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!

நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, வருகின்ற மார்கழி 10ஆம் நாள் (25-12-2025) காலை 10 மணியளவில் சிவகங்கை அரண்மனை வாயிலில் உள்ள வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
மார்கழி 10 | 25-12-2025 காலை 10 மணியளவில்
இடம்:
சிவகங்கை அரண்மனை
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை திரு.வி.க. நகர் மண்டலம் (திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்