க.எண்: 2025110979
நாள்: 18.11.2025
கடலம்மா மாநாட்டுக்கானப் பணிகளைத் திட்டமிடும் பொருட்டு, ஒருங்கிணைந்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் தலைமை
ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் 19-11-2025 காலை 10:30 மணியளவில் இராதாபுரம், கூத்தங்குழி மாநாட்டுத் திடலில் நடைபெறவிருக்கிறது.
கடலம்மா மாநாட்டுக்கானப் பணிகளைத் திட்டமிடும் பொருட்டு, ஒருங்கிணைந்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: கார்த்திகை 03 | 19-11-2025 காலை 11 மணியளவில் இடம்: கூத்தங்குழி, இராதாபுரம்
இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



