க.எண்: 2025100909
நாள்: 08.10.2025
அறிவிப்பு:
வீரப்பெரும்பாட்டன்
தீரனும் அவன் பேரனும் புகழுரை: நாள்: ஐப்பசி 01 | 18-10-2025 மாலை 04 மணியளவில் இடம்: சதுரங்காடி
|
நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற ஐப்பசி 01ஆம் நாள் 18-10-2025
மாலை 04 மணியளவில் சேலம் மேட்டூர் அணை சதுரங்காடி அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி