தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்

62

க.எண்: 2025050507

நாள்: 11.05.2025

அறிவிப்பு:

தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிய கட்டமைப்பு நிறைவுறாத
சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
12-05-2025 காலை 11 மணி முதல்இடம்:
மாஸ்டர் மகால்,
(முடக்குச் சாலை)
மதுரை

தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்
புதிய கட்டமைப்பின் அடிப்படையில் பொறுப்பாளர் நியமனம் நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 12-05-2025 அன்று காலை 11 மணி முதல் மதுரை முடக்குச் சாலையில் அமைந்துள்ள மாஸ்டர் மகால் அரங்கில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.

இந்நிகழ்வில் மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் ஆவடி மண்டலம் (ஆவடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்