க.எண்: 2025040352
நாள்: 16.04.2025
அறிவிப்பு:
தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
உழைப்பாளர் நாள் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி
(மே 01, திருப்பூர்)
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதைப் போற்றும் விதமாக உலகெங்கும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகின்ற திருநாளான மே நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தொழிற்சங்கப் பேரவை சார்பாக 01-05-2025 அன்று மாலை 04 மணியளவில் திருப்பூரில் உழைப்பாளர் நாள் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி முன்னெடுக்கப்படவிருக்கிறது.
தொழிற்சங்கப் பேரவையினர் முன்னெடுக்கும் இந்நிகழ்வில், திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோவை, நீலகிரி, நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி