க.எண்: 2024080212
நாள்: 05.08.2024
அறிவிப்பு:
ஆகத்து – 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வரும் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 04 மணியளவில் தர்மபுரி மாவட்டம், அரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
உலக பழங்குடியினர் நாள் 2024!
தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 09-08-2024 | மாலை 04 மணியளவில்
இடம்: அரூர், கச்சேரி மேடு
(வட்டாட்சியர் அலுவலகம் அருகில்)
எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்