அறிவிப்பு: ஆக. 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

182

க.எண்: 2024080212

நாள்: 05.08.2024

அறிவிப்பு:

ஆகத்து – 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வரும் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 04 மணியளவில் தர்மபுரி மாவட்டம், அரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

உலக பழங்குடியினர் நாள் 2024!

தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 09-08-2024 | மாலை 04 மணியளவில்
இடம்: அரூர், கச்சேரி மேடு
(வட்டாட்சியர் அலுவலகம் அருகில்)

எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்

தலைமை நிலையச் செயலாளர்

முந்தைய செய்திசட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அடுத்த செய்திமுதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அவரவர் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்