கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டாடா தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள 3800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20000க்கும் மேற்பட்ட வேளாண்பெருங்குடிகளை வெளியேற்ற துடிக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்தும், டாடா தொழிற்சாலையில் பெருமளவில் வடமாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படுவதைக் கண்டித்தும், 90 விழுக்காடு வேலைவாய்ப்பு உரிமையை மண்ணின் மைந்தர்களுக்குப் பெற்றுத்தர தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 28-12-2022 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில், வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளியில் இராயக்கோட்டை – ஒசூர் நெடுஞ்சாலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.